சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-02-26 10:55 GMT

திருவாரூர்-கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு பகுதி உள்ளது. இங்கு பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. தொட்டியை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து கிடக்கிறது. மேலும், குடிநீர் தொட்டி பெயர்ந்து தலை கீழாக கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்