கைப்பம்பு சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-26 10:54 GMT

திருவாரூர் தெற்கு வீதி-காட்டுக்கார தெரு செல்லும் சாலையில் பொதுமக்கள் வசதிக்காக கைப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கைப்பம்பு முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கைப்பம்பின் அடிப்பகுதி முழுவதும் துருப்பிடித்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கைப்பம்பை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கைப்பம்மை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா.


மேலும் செய்திகள்