தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-02-15 17:55 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமம் திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து பள்ளிக்கூடத்தெரு, நடுத்தெரு போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் செல்வதற்கு அமைக்கப்பட்ட குழாய் கழிவுநீர் கால்வாய் வழியாக செல்வதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் சென்ற குடிநீர் குழாயை அப்புறப்படுத்தி சுகாதாரமான முறையில் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்