ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-02-05 11:35 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மைலன்கோன்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடு இல்லாத இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சிதிலமடைந்து தூண்கள் இடிந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த தொட்டியின் அருகே வீடுகள் உள்ளன. பள்ளி மாணவர்கள், சிறுவர்- சிறுமிகள் இந்த குடிநீர் தொட்டியின் அருகே விளையாடி வருகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்