காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-02-01 17:38 GMT
திருக்கோவிலூர் தாலுகா மணலூர்பேட்டை பேரூராட்சியின் ஞானம் பெற்றான் தாங்கல் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்