குடிநீர் திருட்டு

Update: 2023-01-29 14:39 GMT

கடமலைக்குண்டு கிராமத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகத்தின் போது பொதுமக்கள் சிலர் மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் பிடித்து வருகின்றனர். இதனால் அனைத்து தெருக்களிலும் பொதுமக்களுக்கு போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் திருட்டில் ஈடுபடும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்