சுத்தமான குடிநீர் வேண்டும்

Update: 2023-01-29 11:26 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் கிராம மக்கள் குடிக்கும் குடிநீரில் உப்பின் அளவு அதிகளவில் உள்ளது. இந்த நீரை கொண்டே அந்த பகுதி மக்கள் சமையல் செய்கின்றன. குடிநீராகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பல்வேறு தொற்று நோய்களும் பரவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்