கிணற்றை சுத்தம் செய்ய கோரிக்கை

Update: 2023-01-18 16:14 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பெரிய அணைக்கரைப்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் கோழி, பூனை என பல்வேறு விலங்குகள் தவறி விழுந்து இறந்து கிடக்கிறது. இதனால் தற்போது கிணறு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்