மூடப்படாத பள்ளம்

Update: 2023-01-18 14:32 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே கூத்தனூர் செல்லும் சாலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. அதனை சரி செய்ய பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. கசிவு சரி செய்யப்பட்டநிலையில் அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடாமாலேயே காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பள்ளத்தின் அருகே எந்தவொரு முன்னெச்சரிக்கை தடுப்புகளும் வைக்கப்படவில்லை. எனவே எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு போர்க்கால அடிப்படையில் பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்