குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-01-18 11:58 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி கடவலூரில் உள்ள கள்ளக்குறிச்சி சாலையில் கடந்த 2 மாதமாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே உடைந்து குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்