குடிநீர் எந்திரம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-01-08 16:54 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொது மக்களின் பயன்பாட்டிற்காக பஸ் நிலையத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் எந்திரம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் எந்திரத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-வெங்கடேசன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்