தண்ணீர் குழாய் சீரமக்கப்படுமா?

Update: 2023-01-08 16:53 GMT

ஓசூர் மஞ்சுசிரி நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு நடைபயிற்சி செய்பவர்களுக்கு நடைபாதை உள்ளது. பூங்காவில் உள்ள தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி நடைபாதை முழுவதும் பரவி பாசி படர்ந்து நடைபயிற்சி செய்பவர்களுக்கும், பூங்காவுக்கு விளையாடவரும் சிறுவர்களுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-சுப்பிரமணியன், ஓசூர்.

மேலும் செய்திகள்