பொதுமக்கள் அவதி

Update: 2023-01-08 16:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொக்கனாரேந்தல் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் உள்ளனர். ஆனால் காவிரி கூட்டு குடிநீர் இந்த கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் மக்கள் குடிநீர் எடுக்க சுமார் 2 கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து உள்ளது.  எனவே உடைந்த குழாயை சீரமைக்கவும், முறையாக குடிநீர் கிடைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்