குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-08 12:01 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் ஆயக்காரன்புலம்- 2 ஊராட்சி பகுதியில் வெள்ளாகுளம் உள்ளது. இந்த குளம் முறையான பராமரிப்பின்றி நாணல்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள், விவசாயிகள் குளத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குளத்தை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்