பராமரிக்கப்படாத குடிநீர் தொட்டி

Update: 2023-01-01 17:44 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் தொட்டி பராமரிக்கப்பட்டு, வெகு நாட்கள் ஆகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கிராம மக்கள் நலன் கருதி மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்