விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.