வடிகால் வசதி அமைக்கவேண்டும்

Update: 2022-12-25 13:17 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மேலத் தெரு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும்அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்