அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்

Update: 2022-12-21 16:24 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் இட்டிக்கல் அகரம் ஊராட்சி பாலகுறி கிராமத்தில் ராயக்கோட்டை மெயின் ரோட்டில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வெளியேறி வருகிறது. மேலும் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சில பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்து குழாயை சரி செய்ய வேண்டும்.

-சூரியபெருமாள், பாலகுறி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்