அங்கன்வாடி மையம் முன்பு தேங்கும் மழைநீர்

Update: 2022-12-14 17:03 GMT

ஆத்தூர் தாலுகா ஆரியநெல்லூர் கிழக்கு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது கூட அப்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மையம் முன்பு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்