தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-12-11 18:00 GMT
விக்கிரவாண்டி தாலுகா நங்காத்தூர் கிராமம் ஈஸ்வரன் கோவில் தெருவில் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, அப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கிராம மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லை. எனவே நங்காத்தூர் கிராமத்தில் மழைநீர் தேங்காமல் வடிந்து செல்ல, வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்