தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-11 13:13 GMT

திருவாரூர் நகராட்சி புறநகர் பகுதி ராமநாதன் நகர், தைத்தெரு, கார்த்திகைத்தெரு ஆகிய பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் குழிகள் உள்ளன. இவற்றின் மூடிகள் சரியாக மூடப்படாமலும், சேதமடைந்தும் காணப்படுகின்றன. இதன்காரணமாக கழிவுநீர் வெளியேறி காலியிடங்களிலும், சாலையோரத்திலும் தேங்கி நிற்கிறது. வீட்டு உபயோக தண்ணீரிலும் கழிவுநீர் கலந்து வரும் சூழல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள், குழந்தைகள் நோய் தொற்றுக்கு உள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு முறையான தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்