வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-12-11 12:54 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில், தைக்கால் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

மேலும் செய்திகள்