தினமும் குடிநீர் வழங்கலாமே!

Update: 2022-12-11 12:38 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் சொக்கநாதபுரம் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதி மக்களுக்கு  குடிநீர் குழாய் மூலம் 3  நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் போதிய தண்ணீர் இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்