ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-12-07 16:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சந்தகவுண்டனூர் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை முறையாக சுத்தப்படுத்தாமல் குடிநீர் வினியோகிக்கப்படுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்