குடிநீர் தொட்டியில் விரிசல்

Update: 2022-12-04 17:27 GMT
புவனகிரி ஒன்றியம் எறும்பூர் கிராமத்தில் உள்ள கடம்பாவனிஸ்வரர் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி பலத்த சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் தண்ணீா் ஒழுகுகிறது. மேலும் குடிநீர் தொட்டி மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்