ஓடையில் கழிவுநீர்

Update: 2022-11-30 14:55 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு-மகாராஜபுரம் சாலையில் வீராகசமுத்திரம் ஓடை உள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஓடை நீரை பயன்படுத்தும் நிலையில் சிலர் இதில் கழிவுநீரை கலந்து குப்பையை கொட்டி வருகிறார்கள். மேலும் இப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து ஓடையில் கழிவுநீர் கலக்காதவாறு தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்