விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியினர் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை தொடர்கிறது. எனவே இப்பகுதியில் தாமிரபரணி குடிநீரை தடையின்றி வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.