ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-11-27 12:01 GMT

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரையான் குறிச்சி கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்