வீணாகும் குடிநீர்

Update: 2022-11-27 10:27 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடி அருகே திருவோணமங்கலத்தில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் கொள்ளிடம் குடிநீ்ா குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி வீணாக சாலையோரத்தில் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் சேறும்,சகதியுமாக மாறிவருகிறது. மேலும், தேங்கி கிடக்கும் நீரால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினால் அந்த பகுதி மக்களுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்