வீணாகும் தண்ணீர்

Update: 2022-11-23 16:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே அலேகிருஷ்ணாபுரம் இருந்து அலேலிங்கபுரம் செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாகி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்துளை கிணற்றின் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. சாலையில் வெளியேறி வருவதால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை மூடி உரிய வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனியப்பன், அலேகிருஷ்ணாபுரம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்