கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-11-23 12:42 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் பெருமாள் மேல வீதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி, தேங்கி காணப்படுகிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்