குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுமா?

Update: 2022-11-23 11:59 GMT

பெரம்பலூர் மாவட்டம், துறையூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள லாடபுரம் பிரிவுச் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள நீர்‌ உப்பு நீராக இருப்பதால், குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடுகிறது. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து லாடபுரம் வழியாக அம்மாப்பாளையம் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் பொது குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்து இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்