குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-11-23 11:56 GMT
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கரியமாணிக்கம் மேற்கு கிராமத்துக்கு உட்பட்ட வாத்தலை அம்பேத்கார் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் தினமும் வருவதில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்