நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-11-20 14:31 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வாகவயல் கிராமத்தில் 2 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாயில் சிலர் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் கண்மாயில் தண்ணீர் இருப்பு குறைந்து வரும் அபாயம் உள்ளது. இந்த கண்மாய் நீரே இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. எனவே அதிகாரிகள் இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்