வீணாகும் குடிநீர்

Update: 2022-11-16 11:13 GMT
பிரம்மதேசம் அருகே ஏந்தூர் ஊராட்சியில் பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழாயில் டேப் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் குடித்தவுடன் குழாயை மூட முடியவில்லை. இதன் காரணமாக தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்