சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி

Update: 2022-11-13 17:36 GMT
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் பூங்குடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் இதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த கிழே விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இந்த தொட்டி மிகவும் பலவீனம் அடைந்த நிலையில் உள்ளதால் எந்நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. இதன் அருகே அரசு துவக்கப்பள்ளி உள்ளதால் மாணவர்கள் மிகவும் ஒருவித அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் நிகழும் முன் சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்