பழுதடைந்த அடிபம்பு

Update: 2022-11-06 14:16 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் குடிநீர் பயன்பாட்டுக்காக அடிபம்பு ஒன்று அமைக்கப் பட்டது. இதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த அடி பம்பு பழுதடைந்து, சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்