செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் அகஸ்தீசுவரர் கோவில் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. யாரும் கண்டு கொள்வதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் வகையில் குளம் இருப்பதால், அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும்.