மதுரை சர்வேயர் காலனி கண்மாயில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் தேவையான நீரை தேக்க முடியாததால் இப்பகுதியில் நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.