குடிநீருக்காக தவிக்கும் மக்கள்

Update: 2022-10-23 11:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சித்தாவனம், அம்பலவாண நேந்தல், மணல்மேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் குடிநீர் எடுப்பதற்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்