சேதமடைந்த குடிநீர் குழாய்

Update: 2022-10-12 13:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், வானதிராயன்பட்டி ஆதிதிராவிட காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள குடிநீர் குழாயை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்