விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வாருகாலில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. எனவே வாருகாலை சரிசெய்து குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.