குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2022-10-01 14:35 GMT
நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சி கருவேலன்குளம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்