காட்சி பொருளாக மாறிய குடிநீர் தொட்டி

Update: 2022-09-30 14:46 GMT
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சி, மணத்தொண்டி கிராமத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கடந்த ஓராண்டாக பயன்பாட்டில் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்