குடிநீர் வராததால் மக்கள் அவதி

Update: 2022-09-29 12:23 GMT
திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்குட்பட்ட பிராட்டியூர் காவேரிநகர் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்பட சுமார் 600 வீடுகள் அந்த பகுதியில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை பணிகள் நடைபெற்றது. இதனால் குடிநீர் குழாய் இணைப்பு தடைபட்டு விட்டதால் குடிநீர் வராததற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆகவே அந்த பகுதியில் குடிநீர் தங்கு தடையின்றி சீராக வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்