தேங்கி நிற்கும் குடிநீர்

Update: 2022-09-29 09:30 GMT

கோவை மசக்காளிபாளையம் மெயின் ரோட்டில் நிலத்துக்கு அடியில் குடிநீர் குழாய் புதைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆலமரம் அருகே குழாய் உடைந்து, சாலையில் குடிநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை பழுதடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அங்கு விபத்து ஏற்படாமல் தவிர்க்க தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்