விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் இருந்து செட்டியார்பட்டி செல்லும் மெயின்ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக வெளியேறுகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் தேங்கிய தண்ணீர் வாகனஓட்டிகளால் நடைபாதையினர் மீது சிதறி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.