பெரம்பலூர் நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் வடக்கு பகுதியில் தண்ணீர் தொட்டி உள்ளது. அதில் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டு தேவைக்கு தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது தண்ணீர் தொட்டி பயன்பாடில்லாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.