குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2022-09-26 16:44 GMT

திசையன்விளை பேரூராட்சி செல்வமருதூர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. மேலும், சாலையும் சேதமடைகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்