புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-09-26 11:08 GMT
பிரம்மதேசம் அருகே கொளத்தூரில் இருந்து சிறுவாடிக்கு செல்லும் சாலையோரம் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வந்தது. இதுதொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில், படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம், உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணியை தொடங்கினர். இந்நிலையில் உடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய காரணமாக இருந்த தினத்தந்தி நாளிதழுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்